புதுடெல்லி: டெல்லி துணை காவல் ஆணையர் ராகேஷ் பவேரியா நேற்று கூறியதாவது: டெல்லியில் பல்வேறு பிராண்டுகளில் போலி மசாலாப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. தனிப்படை போலீஸார் வடகிழக்கு டெல்லியின் காராவால் நகரில் கடந்த மே 1-ம் தேதி சோதனை நடத்தினர்.
இதில் 2 தொழிற்சாலைகளில் மிளகாய் தூள், மல்லித்தூள் உள்ளிட்ட போலி மசாலா பொருட் கள் 7,105 கிலோ அளவுக்கு கைப்பற்றப்பட்டன.
மேலும் இவற்றை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கெட்டுப்போன தினைகள், அரிசி, மல்லி, தரம் குறைந்த மஞ்சள், யூகலிப்டஸ் இலைகள், மிளகாய், மிளகாய் காம்பு, மரத்தூள், அழுகிய தேங்காய்கள், சிட்ரிக் அமிலம், நிறத்துக்கான ரசாயனம் என 7215 கிலோ அளவுக்கு பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர்கள் திலீப் சிங் (46). சர்ஃப்ராஜ் (32) ஆகியோரும் குர்ஷீத் மாலிக் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்இந்த கலப்பட மசாலாப் பொருட்களை உள்ளூர் கடைகள் மற்றும் டெல்லி தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள விற்பனையாளர்களுக்கு அசல் தயாரிப்புகளின் விலைக்கு அளித்து வந்துள்ளனர்.
மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விரிவான விசாரணை நடத்த இருக்கிறோம். இவ்வாறு துணை காவல் ஆணையர் ராகேஷ் பவேரியா கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
26 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
18 mins ago
விளையாட்டு
53 mins ago
இந்தியா
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago