ரேஷன் வாங்க மறுத்த மூதாட்டி உ.பி.யில் கொலை

By செய்திப்பிரிவு

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள பிராசாபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஸி (75). இவர், ரேஷன் பொருட்களை வாங்க நியாய விலைக் கடைக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது, நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும், மிகக் குறைந்த அளவிலான பொருட்களை நியாய விலைக் கடையில் இருந்தவர்கள் வழங்கியதாகத் தெரிகிறது.

இதனால், அந்தப் பொருட்களை வாங்க மறுத்து, கடையில் உள்ள ஊழியர்களிடம் ஆஸி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த நியாய விலைக் கடை உரிமையாளர், மூதாட்டி ஆஸியை கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின்பேரில், நியாய விலைக் கடை உரிமையாளர் நஸீம் உள்ளிட்ட மூவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 mins ago

தமிழகம்

8 mins ago

சுற்றுச்சூழல்

25 mins ago

விளையாட்டு

34 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

57 mins ago

கல்வி

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்