ஒரே வீட்டில் 22 வாக்காளர்கள்: வாக்கு சேகரிக்க வரிசையில் நிற்கும் அரசியல்வாதிகள்

By செய்திப்பிரிவு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கோல்காபூர் மாவட்டம் தெர்வத் கிராமத்தில் சதாசிவ் மாலி(83) ம்றறும் அவரது 5 சகோதாரர்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் 47 பேருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசிக்கின்றனர். இதுபோன்ற கூட்டுக் குடும்பத்தை காண்பது மிகவும் அரிது. இவர்களில் ஒரு சகோதரர் மட்டும் இறந்துவிட்டார். குடும்பத் தொழில் விவசாயம். சதாசிவ் மாலி என்பவருக்கு ஆரம்பத்தில் ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலமே இருந்தது. சதாசிவ் மாலி மற்றும் அவரது சகோதரர்கள் கஷ்டப்பட்டு உழைத்ததால் அவர்களின் நிலம் 82 ஏக்கராக விரிவடைந்துள்ளது.

இவர்கள் தனிக்குடித்தனம் செல்லாமல் ஒற்றுமையாக தெர்வத் கிராமத்தில் ஒரே வீட்டில் தங்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இவர்களது வீட்டில் ஒரு வேளை உணவு சமைக்க 4 கிலோ அரிசி அல்லது கோதுமை தேவைப்படுகிறது. உணவுதானியங்கள், காய்கறிகள், நிலக்கடலை போன்றவை எல்லாம் அவர்களது நிலத்தில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. பசு மாடுகள் மற்றும் எருமை மாடுகள் வைத்திருப்பதால் பாலுக்கும் பிரச்சினை இல்லை.

சில பொருட்களை மட்டுமே இவர்கள் கடைகளில் வாங்குகின்றனர். இவர்களது குடும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் தாது மாலி(36) என்ற ராணுவ வீரர் கடந்த 2014-ம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர்கள் வீட்டில் மொத்தம் 22 வாக்காளர்கள் உள்ளனர். அதனால் ஒட்டு கேட்டுவரும் அரசியல்வாதிகள் அனைவரும் இவர்கள்வீட்டுக்கு வந்து வரிசையில் நின்று ஓட்டுகேட்கின்றனர்.

இது குறித்து சதாசிவ் மாலி கூறுகையில், ‘‘தேர்தல் நேரத்தில் மட்டும் தலைவர்கள் இங்கு வரக்கூடாது. ஊரில் நல்லது, கெட்டது நடைபெற்றாலும் வர வேண்டும். எனது மற்றும் எனது சகோதாரர்களின் மகள்கள்திருமணம் செய்து கொண்டு தங்கள் கணவருடன்வெளியூர்களில் வசிக்கின்றனர். பண்டிகை காலங்களில் அவர்கள் இங்கு வந்து கொண்டாடுவர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

37 mins ago

விளையாட்டு

30 mins ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

49 mins ago

மாவட்டங்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்