புதுடெல்லி: மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் பகுதியில் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதில், யவட்மால் - வாசிம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஹேமந்த் ராஜ் ஸ்ரீக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். இதனால் மேடையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவருக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. முன்னதாக, வெப்பம் காரணமாக அவர் அசௌகரியமாக உணர்வதாக அங்கிருப்பவர்களிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “இப்போது நான் முற்றிலும் ஆரோக்கியமாக இருக்கிறேன். அடுத்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருத் நகருக்குச் செல்கிறேன். உங்கள் அன்புக்கும் நல்வாழ்த்துக்களுக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
விளையாட்டு
9 hours ago
விளையாட்டு
11 hours ago