மேட்டுப்பாளையத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட இரு பெண்கள் உயிரிழப்பு

By பிடிஐ

கோவை அருகே கோயில் பிரசாதம் சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், இதில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.

கோவையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டுப்பாளையம் செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் நேற்று மாலை பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இரு குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் 30 பேரும் இப்பிரசாதத்தை சாப்பிட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் வயிற்று வலி, மயக்கம் ஏற்பட்டது.

இவர்கள் திடீர் உடல்நலம் குன்றிய நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் லோகநாயகி மற்றும் சாவித்ரி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

கெட்டுப்போன நெய், எண்ணெய் ஆகியவற்றை பிரசாதம் செய்யப் பயன்படுத்தியதால் அது உணவில் விஷமாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்