கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் ராகுல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் பெங்களூருவில் நேற்று தொழிலதிபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரியால் வணிக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகவும் சிக்கலான வரிவிதிப்பு நடைமுறையாக ஜிஎஸ்டி உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி வரி எளிமைப்படுத்தப்படும். பெட்ரோலிய பொருட்களும் ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்த புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இந்தத் துறையில் சீனாவுடன் நாம் போட்டியிட வேண்டும். குறு, சிறு தொழில் துறையை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் அடுத்த சில மாதங்களில் தேசிய அளவிலான கொள்கை தயாரிக்கும் பணி தொடங்கும்.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி, வங்கி மோசடிகளால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இதற்கான விலையை பாஜக கொடுக்க நேரிடும்.
இவ்வாறு அவர் பேசினார். துப்புரவு தொழிலாளர்களுடனும் ராகுல் கலந்துரையாடினார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 mins ago
ஜோதிடம்
27 mins ago
வாழ்வியல்
32 mins ago
ஜோதிடம்
58 mins ago
க்ரைம்
48 mins ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago