ஹைதராபாத்: ஹைதராபாத் அருகே சங்காரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடீரென டேங்கர் வெடித்து தீப்பற்றியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், ஹத்நூரா மண்டலம், சந்தாபூர் எனும் ஊரில் எஸ்.பி. ஆர்கானிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிற்சாலையில் திடீரென ரியாக்டர் டேங்கர் வெடித்து தீப்பற்றியது.
தீ மளமளவென பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். இந்த கோர விபத்தில் தொழிற்சாலையின் இயக்குநர்களில் ஒருவரான ரவி உட்பட மொத்தம் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.இவர்கள் அனைவரும் சங்காரெட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
சினிமா
25 mins ago
சுற்றுச்சூழல்
19 mins ago
தமிழகம்
39 mins ago
ஆன்மிகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
54 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago