உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குப் பிறகு மூன்று தேர்தல் ஆணையர்களுக்கும் 2 மடங்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட 2 தேர்தல் ஆணையர்களுக்கும், உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக ஊதிய உயர்வு தரப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஊதியத்தை உயர்த்தி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அதுபோலவே தேர்தல் ஆணையத்துக்கும் பெறப்பட்டுள்ளது.
இதற்கு முன் தேர்தல் ஆணையர்கள் 3 பேரும் மாதத்துக்கு ரூ.90 ஆயிரம் ஊதியம் பெற்று வந்த நிலையில், ரூ.2.50 லட்சம் பெறுவார்கள்.
இந்த ஊதிய உயர்வு கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. இதனால், ஒவ்வொரு தேர்தல் ஆணையரும் நிலுவைத் தொகையாக ஏறக்குறைய ரூ. 35 லட்சத்துக்கு குறையாமல் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் ஆணையர்கள் பணிக்கான சட்டம் 1991ன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையாக ஊதியம் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தொழில்நுட்பம்
10 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
40 mins ago
விளையாட்டு
48 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago