காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: பலி 3-ஆக உயர்வு

By செய்திப்பிரிவு

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் கடந்த 24-ம் தேதி கொல்லப்பட்டதை எதிர்த்து சோபியான் மாவட்டத்தில் ராணுவத்தினருக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது, ராணுவத்தினரை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீச்சில் காயமடைந்த ராணுவ அதிகாரி ஒருவரை கொல்லவும் முயற்சி நடந்தது. கூட்டத்தைக் கலைக்க ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 இளைஞர்கள் இறந்தனர். சம்பந்தப்பட்ட ராணுவ மேஜர் மீது போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரியாஸ் என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதையடுத்து, துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, ராணுவத்தினர் மீது நடந்த கல்வீச்சு தாக்குதல் குறித்து ராணுவம் சார்பிலும் நேற்று புகார் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்