மத்திய பிரதேசத்தில் ஒரு வயது பெண் குழந்தையைக் கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அழுத குழந்தையின் தொண்டையை கூர்மையான ஆயுதம் கொண்டு அறுத்துக்கொன்ற ஈவு இரக்கமற்ற தாய் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
தல்வாடி படேல்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவரது பெண் குழந்தைக்கு வயது ஒன்றுதான் ஆகிறது. இன்று உணவுவேளைக்குப் பிறகு மதியம் அனிதா, (புதன்கிழமை) தனது குழந்தைக்கு பாலூட்டினார். அதன்பிறகு அழத் தொடங்கிய குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. இதனால் எரிச்சலடைந்த அனிதா அருகில் கிடைத்த கூர்மையான ஆயுதம் ஒன்றினால் குழந்தையின் தொண்டையை அறுத்துக் கொன்றார்.
குல்ஷி காவல்நிலைய போலீஸாரால் அனிதா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்த அனிதாவின் உறவினர் ரங்கா பாய், ''கழுத்திலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்தேன். சிறிதுநேரத்தில் குழந்தையின் அழுகை நின்றது. இச்சம்பவம் நடந்தபோது வீட்டில் அனிதாவின் கணவர் இல்லை.'' என்று கூறினார்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago