மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

By செய்திப்பிரிவு

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய அழற்சி காரணமாக சமீபத்தில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந் நிலையில், நேற்று முன்தினம் மாலை அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து, தலைநகர் பனாஜியில் நேற்று பேட்டியளித்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறுகையில், ‘‘முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமாக இருக்கிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்’’ என்றார். பாரிக்கருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பை மருத்துவமனையில் இருந்து திரும்பியவுடன் கடந்த 22-ம் தேதி சட்டப்பேரவையில் மாநில அரசு பட்ஜெட்டை முதல்வர் மனோகர் பாரிக்கர் தாக்கல் செய்தார். இந்நிலையில், அவருக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

22 mins ago

க்ரைம்

3 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்