சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

By செய்திப்பிரிவு

சபரிமலையில் கடந்த 1-ம் தேதி முதல் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சுவாமி தரிசனத்துக்கு பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருக்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் வழிபாடு முடிந்து மகரஜோதி வழிபாடு கடந்த டிசம்பர் 30-ம் தேதி தொடங்கியது. வரும் 14-ம் தேதி வரை மகரஜோதி வழிபாடு நடக்கிறது.

கடந்த 1-ம் தேதி முதலே சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று கூட்டம் அலைமோதியது.

இதனால், சுவாமியை தரிசிக்க பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. கோயில் வளாகத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் வழிபாட்டை முடித்துக் கொண்டு பக்தர்கள் விரைவாக செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

பம்பையிலும் பக்தர்கள் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க தேவையான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. ஜனவரி 14-ம் தேதி மகர ஜோதி தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வலைஞர் பக்கம்

26 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்