பட்டாசுக்கு தடை கோரிய வழக்கு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

பட்டாசுக்கு தடைகோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதற்கு கடந்த தீபாவளியின் போது டெல்லியில் தடை விதிக்கப்பட்டது. சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசில் 80 சதவீதம் வரை வடமாநிலங்களிலேயே விற்பனையாகும் நிலையில், வடமாநிலங்களில் இருந்து சிவகாசி பட்டாசை கொள்முதல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து பட்டாசு உற்பத்திக்கு எதிரான வழக்கை விரைந்து முடிக்கவும், சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பாக மத்திய அரசு சிறப்பு சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும், கடந்த டிச.26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் சிவகாசியில் நடந்து வருகிறது

இந்நிலையில், நாடு முழுவதிலும் பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கலானது. இந்த மனுவை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதுதொடர்பாக பதில் மனுதாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என்ற பட்டாசு உற்பத்தியாளர்களின் கோரிக்கையயும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

இந்தியா

31 mins ago

சினிமா

40 mins ago

விளையாட்டு

47 mins ago

கருத்துப் பேழை

4 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்