மங்களூரில் இந்துத்துவா ஆதரவாளர்களால் தாக்கப்பட்டவர் உயிரிழந்தார்

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் மங்களூரில் இந்துத்துவா ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட அகமது பஷீர் சிகிச்சை பலனின்றி இன்று (ஞாயிறு) உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கட்டிபல்லா என்ற இடத்தில் சில தினங்களுக்கு முன் பாஜக தொண்டர் தீபக் ராவ் என்பவர் முஸ்லிம் இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் உயிரிழந்தார்.

 

இதைத்தொடர்ந்து ஜனவரி 3ம் தேதி அகமது பஷீர் (வயது 47) என்பவர் இந்துத்துவா ஆதரவாளர்கள் சிலரால் தாக்கப்பட்டார். மங்களூரு நகரில் நடந்த இந்த தாக்குதலுக்கு பின் நீண்டநேரம் போராட்டத்திற்கு பிறகே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

தாக்குதல் நடந்து வெகு நேரமாகியும் போலீஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. அருகேயுள்ள உடுப்பிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா வருகை தந்ததால், மங்களூரில் இருந்து போலீஸார் பலர் அங்கு அனுப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

பஷீரை தாக்கிய நபர்களை கர்நாடக போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்நிலையில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பஷீர் இன்று உயிரிழந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

29 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இணைப்பிதழ்கள்

4 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

உலகம்

6 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்