உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு இருவர் பரிந்துரை

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் 4 மூத்த நீதிபதிகளை கொண்ட கொலீஜியத்தின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, உத்தராகண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகிய இருவரின் பெயர் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.

கே.எம்.ஜோசப் 2004-ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், பின்னர் உத்தராகண்ட் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அங்கு 2014-ல் அவர் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

இந்து மல்ஹோத்ரா 2007-ல் மூத்த வழக்கறிஞராக அறிவிக்கப்பட்டார். இவர், உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடியாக நியமிக்கப்படும் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை பெறவுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் தற்போது ஒரே பெண் நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த ஆர்.பானுமதி இருந்து வருகிறார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

தமிழகம்

13 mins ago

சினிமா

24 mins ago

சினிமா

38 mins ago

தமிழகம்

28 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

41 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

43 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

மேலும்