டேராடூன்: ஹரியாணாவிலிருந்து கிளம்பிய ஒரு பேருந்து நேற்று உத்தராகண்ட் மாநிலம் நைனிடாலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது கலாதுங்கி அருகே 200 மீட்டர் பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 7 பேர் உயிரிழந்தனர். சம்பவம் அறிந்ததும் அங்கு மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் 26 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 7 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
மற்றொரு விபத்து: பித்தோரகர் மாவட்டத்தில் நடந்த மற்றொரு சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பித்தோரகர் மாவட்டம் தார்ச்சுலா-லிபுலிகே சாலையில் சென்ற கார் மலைப்பகுதியில் இருந்து உருண்டு பாறைகளுக்கு அடியில் சிக்கியது. இதில், காரில் இருந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த கார், அப்பகுதியில் ஓட்டல் நடத்தும் ஹரிஷ் சிங் நபியால் என்பவருக்குச் சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடல்கள் நசுங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் காரில் 6 பேர் இருந்தார்களா அல்லது 8 பேர் இருந்தார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
சுற்றுச்சூழல்
16 mins ago
தமிழகம்
16 mins ago
சுற்றுலா
31 mins ago
வாழ்வியல்
32 mins ago
வாழ்வியல்
41 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
56 mins ago
சுற்றுச்சூழல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago