வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் ஆதரவு: தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து

By செய்திப்பிரிவு

வளர்ச்சி அரசியலுக்கும், நல்ல நிர்வாகத்திற்கும் ஆதரவாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்கள் வாக்களித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இரு மாநிலங்களிலும் பாஜக வெற்றி அடையும் நிலையில் உள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இரு மாநில வெற்றி குறித்து பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது

‘‘வளர்ச்சி அரசியலுக்கும், நல்ல நிர்வாகத்திற்கும் ஆதரவாக குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த மாநிலங்களில் சிறப்புடன் பணியாற்றிய பாஜக தொண்டர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது கடுமையான வெற்றியின் மூலம் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜக மீது குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அம்மாநில மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநிலங்களில் தங்கு தடையின்றி வளர்ச்சி ஏற்படும் வகையில் பாஜக அரசின் பணி இருக்கும்’’ எனக்கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

47 mins ago

க்ரைம்

45 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்