உலகில் பெருகி வரும் செல்ஃபி மோகத்துக்கு ஒடிசாவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக பலியானார். காட்டு யானையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் மோகம் வெகுவாக அவரை செலுத்த யானையை நெருங்கிய போது மிதித்ததில் பரிதாபமாகப் பலியானார்.
ஒடிசா மாநிலம், ஆங்குல் மாவட்டத்தில் கமார் வனப்பகுதி சரகத்தில் கோயில் அருகே காட்டு யானை புகுந்தது, கிராம மக்கள் அந்த யானையை காட்டுக்குள் அனுப்புமாறு விரட்டி வந்தனர். அப்போது செல்ஃபி எடுப்பதற்காக ஜெயகிருஷ்ணா நாயக் என்பவர் உக்கிரமாக இருந்த யானையின் அருகில் சென்ற போது மிதிபட்டு பலியானார்.
ஜெயகிருஷ்ணா நாயக் என்பவர் பல்லாஹரா பகுதியின் கீழ் வரும் நிமிடிபேதா கிராமத்தைச் சேர்ந்தவராவார்.
கிராம மக்களுடன் காட்டிலாகா அதிகாரிகளும் யானையை அதன் கூட்டத்துக்குள் அனுப்ப விரட்டியடித்தனர். இதில் செல்ஃபி மோகத்தால் நாயக் சிக்கி பரிதாபமாக பலியானார்.
பயங்கரக் காயமடைந்த நிலையில் நாயக்கை அருகில் உள்ள கமார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாயக் பரிதாபமாக உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
சினிமா
41 mins ago
க்ரைம்
22 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
35 mins ago
தொழில்நுட்பம்
17 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago