ஒடுக்கப்பட்ட, வெகுஜன மக்களின் தலைவரான லாலு பிரசாத்திற்கு நியாயம் கிடைக்கும், அவருக்காக கடவுளிடம் பிராத்திக்கிறேன் என பாஜக அதிருப்தி எம்.பி சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு எதிராக தொடரப்பட்ட கால்நடைத் தீன ஊழல் தொடர்பான 2வது வழக்கில் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 23) தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை பிஹார் மட்டுமின்றி நாடுமுழுவதும் பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆவலுடன் எதிநோக்கி காத்துள்ளனர்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத்துக்கு எதிராக கடும் பிரச்சாரம் செய்த பாஜக தவைர்களும் இந்த வழக்கில் லாலுவுக்கு எதிராக தீர்ப்பு வரும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக அதிருப்தி எம்.பியும், நடிகருமான சத்ருகன் சின்ஹா, லாலு பிரசாத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
‘‘தேசத்தின் நண்பரும், வெகுஜன மக்களின் தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பத்துக்குரிய ஒரே ஒரு தலைவராக விளங்கி வரும் லாலு யாதவ், மிகவும் உரிய, தகுதியான நீதியை பெறுவார் என நம்புகிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்கள். அவருக்காக பிராத்திக்கிறேன். அவருக்கு கடவுளின் ஆசி உண்டு’’ எனக்கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
சுற்றுலா
5 mins ago
இந்தியா
8 mins ago
இந்தியா
15 mins ago
கல்வி
18 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
7 mins ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
1 hour ago