பிரம்மோற்சவ விழாவின் 4-ம் நாள் கற்பகவிருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி

By செய்திப்பிரிவு

திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவ விழாவின் 4ம் நாளான நேற்று காலை, கற்பகவிருட்ச வாகனத்தில் தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி அடுத்துள்ள திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 15-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இதில், 4-ம் நாளான நேற்று காலை உற்சவ மூர்த்தியான பத்மாவதி தாயார், வேணுகோபால் அலங்காரத்தில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் யானை, குதிரை, காளை போன்ற பரிவட்டங்கள் மற்றும் பல்வேறு மாநில நடனக் கலைஞர்கள் பங்கேற்றனர். மாட வீதிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாருக்கு ஹாரத்தி எடுத்து வழிபட்டனர். இரவு ஹனுமன் வாகனத்தில் தாயார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

தமிழகம்

13 mins ago

உலகம்

17 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்