காஷ்மீர் என்கவுன்ட்டரில் ஜெய்ஷ்-இ-மொகம்மது தீவிரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

By ஐஏஎன்எஸ்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அக்லர் கிராமத்தில் நடந்த என்கவுன்ட்டரில் ஜெய்ஷ்-இ-மொகம்மது தீவிரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்துக் காவல்துறை தரப்பில் கூறும்போது, ''44 ராஷ்ட்ரிய ரைஃபிள் படையைச் சேர்ந்த ஒரு வீரர் விபத்தில் பலியானார். மேலும் இரண்டு வீரர்களும் ஒரு சிவிலியனும் காயமடைந்தனர்.

கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளில் இருவர் பாகிஸ்தானி எனவும் ஒருவர் உள்ளூர்க்காரர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காயமடைந்த வீரர் ஷ்யாம் சுந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏகே 47, எம்16 ரைஃபிள் மற்றும் பிஸ்டல் ஆகியவை என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பவ இடத்தைச் சுற்றிலும் காவல்துறையினரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.

இதையடுத்து வதந்திகள் பரவாமல் தடுக்க, புல்வாமா மாவட்டத்தில் இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

சினிமா

11 mins ago

இந்தியா

12 mins ago

தமிழகம்

44 mins ago

சினிமா

53 mins ago

சுற்றுச்சூழல்

47 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்