டெல்லியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

டெல்லியில் 20-ம் தேதி முதல் விவசாயிகள் 2 நாள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் டெல்லியில் 20-ம் தேதி முதல் 2 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.

இதுகுறித்து அகில இந்திய விவசாயிகள் சபை தலைவர் அசோக் தவாலே கூறுகையில், ‘‘விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலை கொடுக்க வேண்டும். அதை சட்டபூர்வ உரிமையாக்க வேண்டும். கடன் சுமையில் இருந்து விவசாயிகள் முழுமையாக விடுதலை பெற வேண்டும். விவசாயிகளின் கடன்களை பரவலான முறையில் தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 20-ம் தேதி முதல் 2 நாட்கள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொள்கி்ன்றனர்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

இந்தியா

12 mins ago

வணிகம்

27 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

47 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்