கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனை: காங்கிரஸ் காரிய கமிட்டி நாளை கூடுகிறது

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் காரிய கமிட்டி டெல்லியில் நாளை கூடுகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் டெல்லி இல்லத்தில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க ஒப்புதல் வழங்கப்படும் என்று தெரிகிறது.

அடுத்த 15 நாட்களில் தலைவர் பதவிக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்படும் என்றும் ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் டிசம்பர் 9, 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே டிசம்பர் 9-ம் தேதிக்கு முன்பாக காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

கார்ட்டூன்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

49 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்