ஒவ்வொரு துறையிலும் அபார வளர்ச்சி - பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. அந்த ஆண்டில் மே 26-ம் தேதி நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டி மத்திய அரசின் சாதனைகளை பிரதமர் நரேந்திர மோடி தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த வரிசையில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த கட்டுரைகள், காணொலிகளை தனது இணையபக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார்.

இணைய பக்கத்தின் இணைப்பை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பகிர்ந்தார். அதோடு அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அடித்தளத்தை அமைத்துள்ளோம். ஈடு இணையற்ற உள்கட்டமைப்பை வடிவமைத்து உள்ளோம். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தளத்தை உருவாக்கி இருக்கிறோம். இதன் காரணமாக ஒவ்வொரு துறையும் அபார வளர்ச்சி அடைந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

41 mins ago

சினிமா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்