அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது: ராஜ்நாத் சிங்

By பிடிஐ

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லை, எனவே விசாரணைக்கு அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் தேசிய விசாரணை அமைப்பின் புதிய தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்த ராஜ்நாத் சிங், இம்மாதிரி குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுப்பப்படுவது சகஜம்தான் என்றார்.

“இது போன்ற குற்றச்சாட்டுகள் கடந்தகாலங்களிலும் சுமத்தப்பட்டது. அவ்வப்போது இவ்வாறான குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம். இவற்றுக்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை” என்று ராஜ்நாத் சிங் நிகழ்ச்சிக்கிடையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2014 பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அமித் ஷா மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் உயர்ந்திருப்பதாக தி ஒயர் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டு அவதூறானது, தவறானது என்று அமித் ஷா மகன் ஜெய் ஷா ஏற்கெனவே மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

49 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

மேலும்