வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதை பிரதமர் நரேந்திர மோடி தொடங்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
உத்தர பிரதேசத்தில் நேற்று முதல் 3 நாட்களுக்கு ராகுல் காந்தி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று தனது சொந்த தொகுதியான அமேதியில் கத்வாரா என்ற கிராமத்தில் மக்களிடம் அவர் பேசியதாவது:
கடன் சுமையால் விவசாயிகளும் வேலையில்லா திண்டாட்டத்தால் இளைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டும் நாட்டின் முக்கிய பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தீர்வு காண வேண்டும். இவைகளை தீர்க்க முடியவில்லை என்றால் அதை பிரதமர் மோடி கூறவேண்டும். இந்தப் பிரச்சினைகளுக்கு காங்கிரஸ் ஆறு மாதங்களில் தீர்வு காணும். நாட்டு மக்களின் நேரத்தை பிரதமர் நரேந்திர மோடி வீணடிப்பதை நிறுத்திவிட்டு வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
நாட்டுக்கு பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இளைஞர்கள் நினைக்கின்றனர். அவர்களின் கோபம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். அமேதி தொகுதியின் வளர்ச்சியை பாஜக புறக்கணிக்கிறது. நான் உங்களுக்காக போராடுவேன். உத்தர பிரதேசத்தை புறக்கணித்துவிட்டு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை செயல்படுத்துவோம் என்பதில் அர்த்தம் இல்லை.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
12 mins ago
ஓடிடி களம்
26 mins ago
க்ரைம்
44 mins ago
ஜோதிடம்
42 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
47 mins ago
இந்தியா
51 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
59 mins ago
ஓடிடி களம்
1 hour ago