நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன்

By பிடிஐ

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு கேரள உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

கேரளாவில் பிரபல நடிகையை கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், பிரபல மலையாள நடிகர் திலீப் கடந்த ஜூலை 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகர் திலீப் ஜாமீன் மனுவை முதன்முதலில் அங்கமாலி நீதிமன்றம் மறுத்தது. இதனையடுத்து அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

ஆனால், திலீப்பை ஜாமீனில் விடுவித்தால், விசாரணை பாதிக்கப்படும் என்று போலீஸ் தரப்பு கூறியதையடுத்து, திலீப் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஏற்கெனவெ 4 முறை திலீப் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். திலீப் ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, திலீப் கைதாகி 85 நாட்களுக்கு மேலாகியும் குற்றப்பத்திரிக்கை  தக்கல் செய்யப்படவில்லை என்பதை நீதிமன்றத்தில் திலீபின் வழக்கறிஞர் சுட்டிக் காட்டி வாதாடினார். அரசு தரப்பில் திலீப் வெளியே வந்தால் சாட்சியங்களை கலைப்பார் என்று வாதிடப்பட்டது.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திலீப்புக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

32 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்