நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மூன்று ரயில்கள் மோதிக் கொண்டதில் கோர விபத்து நிகழ்ந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில், ஒரு சரக்கு ரயில், யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் ஆகியவை இந்த விபத்தில் சிக்கின. இந்த விபத்தில், சனிக்கிழமை மாலை வரை 261 உயிரிழந்ததாகவும், ஏறத்தாழ ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தை நிகழ்ந்ததை அடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "உள்ளூர் மக்களுக்கும் மீட்புக் குழுக்களும் இரவு முழுவதும் பணியாற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். காயமடைந்த மக்களுக்கு பாலாசோர் மற்றும் கட்டாக் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
சுற்றுலா
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
தமிழகம்
7 hours ago