சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் சாதிக்பாட்சா மகன் முஷ்டாக் பாட்சா விருப்ப மனு அளித்துள்ளார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் பிப்ரவரி 17 முதல் 24-ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். அதன்படி திமுகவினர் ஆர்வமுடன் விருப்பமனுக்களை அளித்து வருகின்றனர். விருப்ப மனு அளிப்பதற்கான தேதி பிப்ரவரி 28-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட திமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முன்னாள் பொருளாளருமான மறைந்த சாதிக்பாட்சாவின் மகன் முஷ்டாக் பாட்சா விருப்ப மனு அளித்துள்ளார். இத்தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி நூற்றுக்கணக்கான திமுகவினர் விருப்பமனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago