வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: குரோம்பேட்டையில் டி.ஆர்.பாலு பிரச்சாரம் 

By செய்திப்பிரிவு

தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற் றப்படும் என்று குரோம்பேட்டையில் நடந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசினார்.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று குரோம்பேட் டையில் நடைபெற்றது.

இதில் வேட் பாளர் டி.ஆர். பாலுவை காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், ஆலந்தூர் சட்டப்பேரவை உறுப்பினரு மான தா.மோ.அன்பரசன் அறிமுகப் படுத்தினார். இக்கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி மற்றும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தை கள் கட்சி, மதிமுக, முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “டி.ஆர்.பாலுவால் கத்திபாரா மேம் பாலம் உட்பட ஜிஎஸ்டி சாலையில் பல பாலங்கள், புதிய சாலைகள், சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுள் ளன. பாலு செய்த சாதனைகளை மக்க ளிடம் சொல்லி வாக்கு சேகரித்தாலே நமது வெற்றி நிச்சயம்” என்றார்.

டி.ஆர்.பாலு பேசும்போது, “மதங் களுக்கு திமுக எதிரி அல்ல, தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தும் நிறைவேற்றப்படும். திட்ட கமிஷனை கலைத்தது தவறு. இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களை வரி என்ற பெயரில் தினமும் மோடி ஏமாற்றி வருகிறார்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்