அதிமுக இதுவரை கண்டிராத பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "நடந்து முடிந்த 16-வது மக்களவைத் தேர்தல் பொதுவாக அமைதியாக நடந்தேறியது. மக்களின் தீர்ப்பின்படி நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதியாகி விட்டது.
பொது தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சி வோட்பாளர்களுக்கும் அக்கட்சியின் தலைவர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் தமிழக முதலமைச்சர் தலைமையில் அ.இ.அ.தி.மு.க இதுவரை கண்டிராத பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
மக்களின் தீர்ப்பை ஏற்று, மதித்து வாழ்த்துக்களை தெரிவிக்கிறேம். வெற்றி பெற்றுள்ளோர் தேர்தல் கால வாக்குறிதிகளை நிறைவேற்றிட வேண்டுமெனவும் கேட்கொள்கிறேம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வோட்பாளர்களின் வெற்றிக்காக ஒத்துழைத்த, பாடுபட்ட, வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு மக்களுக்கான கடமைகளை கம்யூனிஸ்ட் கட்சி தொய்வின்றி தொடர்ந்து பணியாற்றும் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்". இவ்வாறு தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
6 mins ago
இந்தியா
32 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago