முலாயம் சிங் கருத்து வெட்கக்கேடானது: ஜெயபிரதா காட்டம்

By செய்திப்பிரிவு

பாலியல் பலாத்காரம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் கூறிய கருத்து வெட்கக்கேடானது என்று ஜெயபிரதா காட்டமாக கூறினார்.

ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் வேட்பாளர் அமர் சிங்கை ஆதரித்து வாக்கு சேகரித்த நடிகையும், எம்.பி.யுமான ஜெயபிரதா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் பலாத்காரத்திற்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து கூறிய கருத்து வெட்கக்கேடானதும் பொறுப்பற்றதுமாக உள்ளது.

பெண்கள் மீது அவர் வைத்துள்ள நிலைப்பாட்டையே அந்தக் கருத்து வெளிப்படுத்துகிறது. அவரின் கருத்துக்கு மக்கள் பாடம் கற்று கொடுப்பார்கள்" என்றார்.

பிஜ்னோரில் அமர் சிங்கை ஆதரித்து வாக்கு சேகரிக்கையில் அவருடன் நடிகை ஸ்ரீதேவியும் வாக்கு சேகரிப்பில் இணைந்தார்.

முன்னதாக, கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது சரியல்ல என்றும் இளைஞர்கள் தவறு செய்வது வழக்கம்தான் என்றும் முலாயம் சிங் கூறியிருந்தார்.

மேலும், தங்கள் கட்சி அங்கம் வகிக்கும் அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்தால், பாலியல் வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்