‘எமிஸ்’ தகவலின்படி மாணவர் நலத்திட்ட உதவி: கல்வித் துறை

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குநர் (பணியாளர்தொகுதி) பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம், கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) தளத்தில் இருந்து தற்போது அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே 2023-24 கல்வியாண்டில் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்பட உள்ளது.

அதனால், ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் சரிபார்த்து அதில் வேறுபாடுஇ ருப்பின் அந்த விவரங்களை எமிஸ் தளத்தில்டிச.16-க்குள் பதிவேற்ற வேண்டும்.

மேலும், இனி வருங்காலங்களில் எமிஸ் தளத்தில் பதிவு செய்துள்ள மாணவர்கள் எண்ணிக்கையை மட்டுமே அனைத்து நலத்திட்டங்களுக்கும் தேவைப் பட்டியலாக எடுத்துக் கொள்ளப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தொழில்நுட்பம்

4 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

6 hours ago

க்ரைம்

7 hours ago

மேலும்