சென்னை: முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் டிச.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலர்ராஜீவ் குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது ஜிபிஏடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதம்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல், பார்மசி ஆகிய படிப்புகளில் முதுநிலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும்.
பகுதி நேரம், தொலைதூர அடிப்படையில் முதுநிலை படிப்பு படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் டிச.31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெற விரும்புவோர் https://pgscholarship.aicteindia.org என்ற வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை https://www.aicte-india.org என்ற தளத்தில் அறிந்துகொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
10 mins ago
இந்தியா
34 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
இந்தியா
3 hours ago