மாணவருக்கான ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் - அக்.15 முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் பல்வேறு செயல்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கை 3 நாட்கள் நடத்துகிறது.

அக்.15, 16, 17 ஆகிய 3 நாட்களும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த ஓரிகாமி பயிலரங்கில் 3-ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் முதல் அனைவரும் பங்கேற்கலாம்.

இந்த ஓரிகாமி பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளைத் திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளைக் கற்றுத்தர உள்ளார்.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் https://www.htamil.org/01134 என்ற லிங்க்-கில் ரூ.353/- பதிவுக்கட்டணம் செலுத்தி, பதிவு செய்யவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 mins ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சுற்றுலா

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

வாழ்வியல்

9 hours ago

மேலும்