மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் அக்.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கல்லூரி மாணவர்கள் அக்.31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் எம்.ஈஸ்வர மூர்த்தி, அனைத்து அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

மத்திய கல்வி அமைச்சகத்தின் திறன் அடிப்படையிலான கல்விஉதவித்தொகை திட்டம், ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை பெற மாணவர்கள் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.

திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தில் முழு நேர கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பகுதிநேர கல்லூரிகள் அல்லது பட்டயப் படிப்புகள் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க கூடாது.

நடப்பாண்டுக்கான கல்வி உதவித்தொகை பெற, https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் அக்.31-ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tndce.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

இந்த கல்வியாண்டில் (2022-23) புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயரை மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டையில் உள்ளதுபோல் பதிவிட வேண்டும். பெயரில் ஏதேனும் மாற்றம் இருப்பின், ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்கு புத்தக நகலையும் இணைத்து அக்.31-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின்கீழ் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம், முதுநிலை பயில்வோருக்கு ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கல்வி உதவியாக வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்