சென்னை: பொறியியல் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாள் கலந்தாய்வில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1 லட்சத்து 48,811 இடங்கள்உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
முதல்கட்டமாக முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள்ஆகியோர் அடங்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முதல் நாளான நேற்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்த விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கு காலை முதல் இரவு வரை இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வுக்கு மொத்தம் 129 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, தங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்தனர்.
சிறப்பு பிரிவு கலந்தாய்வு வரும் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 2,200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 23-ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. இதில் 1 லட்சத்து 58,157 மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
வணிகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
இணைப்பிதழ்கள்
9 hours ago
க்ரைம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago