பெரம்பலூர் | இரட்டை பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலை

By செய்திப்பிரிவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே திருமணம் ஆகி 3 வருடங்களே ஆன நிலையில் இரட்டை பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, இளம்பெண் தூக் கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயா(27). இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் பென்னக்கோணம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார்(30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. விஜயகுமார் தற்போது துபாயில் பணிபுரிந்து வருகிறார். பெண்ணகோணத்தில் உள்ள தனது கணவர் வீட்டின் முதல் தளத்தில் ஜெயா தனது 2 வயதுடைய இரட்டை பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் ஜெயா தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஜெயா, மின்விசிறியில் சேலையால் தூக்குப் போட்டும், அருகில் 2 பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸார், அங்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளுக்கு விஷம்கொடுத்து விட்டு தாயும் தற்கொலை செய்துகொண்டது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்