கட்டுக் கட்டாக கள்ள நோட்டுகள்: சங்கரன்கோவில் போலீஸார் ஈரோட்டில் விசாரணை

By செய்திப்பிரிவு

ஈரோடு: தென்காசி மாவட்டம், களப்பாகுளம் பகுதியில் சங்கரன் கோவில் தாலுகா போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த 2 கார்களில், 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.

அவை ஈரோட்டிலிருந்து கோவில்பட்டி வழியாக சங்கரன் கோவிலுக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து காரில் இருந்த கள்ளநோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான இரு பெண்கள் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. நேற்று, ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் பகுதியில் சங்கரன்கோவில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

27 mins ago

இந்தியா

42 mins ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்