சென்னை | தலைமைக் காவலர் மீது தாக்குதல்: தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கைது

By செய்திப்பிரிவு

சென்னை: மணலி காவலர் குடியிருப்பில் வசிப்பவர் பிரகாஷ்(35). அயனாவரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி யில் இருந்தபோது, காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அயனாவரம் பி.இ. கோயில் தெருவில் மது போதையில் தந்தையும், மகனும் சண்டையிட்டு வருவதாக தகவல் தரப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தலைமைக் காவலர் அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தேவராஜ்(39), அவரது தந்தை ராஜேந்திரன் இருவரையும் விலக்கிவிட முயன்றார். இதில், கோபம் அடைந்த இருவரும் தலைமைக் காவலரை ஆபாசமாகத் திட்டினர். தேவராஜ் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில், தலைமைக் காவலர் பிரகாஷ் காயம் அடைந்தார். பிரகாஷ் அளித்த புகாரையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து தேவராஜை கைது செய்தனர். கைதான தேவராஜ் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகியாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஆன்மிகம்

7 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

10 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்