ராமேசுவரம்: ராமேசுவரம் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு நாட்டுப் படகில் கடத்திச்சென்ற 300 கிலோகஞ்சாவை கடலோரக் காவல்படையினர் நடுக்கடலில் பறிமுதல் செய்து 4 பேரை கைது செய்தனர்.
ராமேசுவரம் கடலோரப் பகுதியிலிருந்து இலங்கைக்கு படகில்போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள்தடுப்புப் பிரிவினருக்குத் தகவல்கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மண்டபம் கடலோரக் காவல்படையினருடன் இணைந்து மண்டபம், ராமேசுவரம் கடலோரப் பகுதியில் இரண்டு கப்பல்கள் மூலம் ரோந்து மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மாலை சர்வதேச கடல்எல்லையில் நடுக்கடலில் சந்தேகத்துக்கிடமாக சென்றுகொண்டிருந்த நாட்டுப் படகை மடக்கிச் சோதனையிட்டனர். அதில் 300 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து படகை பறிமுதல் செய்து அதிலிருந்த 4 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையைச் சேர்ந்த இனியாஸ் (42) கண்ணன் (27), வேலு (25), கீழக்கரையைச் சேர்ந்த செய்யது (47) எனத் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 300 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 கோடியே 30 லட்சம் என கடலோரக் காவல்படையினர் தெரிவித்தனர்.
இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து மண்டபம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
40 mins ago
வணிகம்
8 hours ago
சுற்றுச்சூழல்
1 hour ago
சுற்றுலா
1 hour ago
கல்வி
46 mins ago
தமிழகம்
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago