சிவகாசி அருகே போக்ஸோவில் தந்தை கைது

By செய்திப்பிரிவு

சிவகாசி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்ஸோ சட்டத்தில் போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி எம்.புதுப்பட்டிசெவலுாரைச் சேர்ந்தவர் அழகப்பன். இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் இவரது மனைவி மூன்று மாதங்களுக்கு முன் தாய் வீட்டுக்குச் சென்றார். சில நாட்களுக்கு முன் அழகப்பன் மகள், மகனை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில் 15 வயது மகள் வீட்டில் தூங்கும்போது அழகப்பன் பாலியல் தொல்லை கொடுத்தார்.

இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் தாய் எம்.புதுப்பட்டி போலீஸில் புகார் அளித்தார்.போலீஸார் சிறுமியின் தந்தையை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் சிறுமியை மீட்டுகாப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

13 mins ago

வாழ்வியல்

40 mins ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்