கவரைப்பேட்டை அடுத்த தண்டலஞ்சேரியில் அரசு டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை சத்தியவேடு வழியாக செம்மரக் கட்டை மற்றும் கஞ்சா ஆகியவை அதிகளவில் கடத்தி வரப்படுவதால் தண்டலஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு வழக்கம்போல போலீஸார் ரோந்து சென்றபோது, அங்கிருந்த டாஸ்மாக் கடையின் பின்பக்க சுவர் துளையிடப்பட்டிருப்பதைக் கண்டனர். சந்தேகம் அடைந்த போலீஸார் உள்ளே பார்த்தபோது, கடைக்குள் அமர்ந்து 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை வெளியே வரவழைத்து பிடித்து விசாரித்தனர்.
இருவரும் சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சதீஷ், விழுப்புரத்தைச் சேர்ந்த முனியன் என்பது தெரியவந்தது. இருவரும் கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.14 ஆயிரம் ரொக்கத்தை திருடியதும் மது பாட்டில்களையும் திருடிச் செல்ல முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கவரைப்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
சினிமா
9 mins ago
தமிழகம்
31 mins ago
இந்தியா
29 mins ago
வாழ்வியல்
48 mins ago
சுற்றுலா
51 mins ago
வணிகம்
6 hours ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago