பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 16 வயது பள்ளி மாணவியை வன்கொடுமை செய்ததாக, 16 வயது மாணவர் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று போக்ஸோ வழக்கில் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகேயுள்ள மேலப்புலியூர் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா மகன் சரத்குமார்(25). இவரும், இவரது நண்பரான 16 வயது சிறுவனும், 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த 16 வயது மாணவியை, கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அண்மையில் மாணவிக்கு உடல்நலம் குன்றியதால் மருத்துவப் பரிசோதனை செய்தபோது, அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சரத்குமார் மற்றும் 16 வயது சிறுவனை நேற்று கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
22 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
49 mins ago
உலகம்
55 mins ago
ஆன்மிகம்
53 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago