அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக் கோணம் தோல் ஷாப் பகுதியைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மனோ(22). இவரது மனைவி அம்சாநந்தினி (21). இவருக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இதனால், சில நாட்களாக இவருடைய உறவினர்களும் அடிக்கடி வீட்டுக்கு வந்து தாயையும், சேயையும் பார்த்து விட்டு சென்றனர்.
நேற்று காலை அம்சாநந்தினி கண்விழித்த போது, அருகில் படுத்திருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது, வீட்டு கழிவறையில் இருந்த தண்ணீர் நிறைந்த பக்கெட்டில் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
இந்த தகவலறிந்த அரக்கோணம் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
11 mins ago
தொழில்நுட்பம்
15 mins ago
இந்தியா
29 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
45 mins ago
விளையாட்டு
53 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago