திருச்சி | ரூ.1 லட்சம் வழிப்பறி செய்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை திருமலை நகரைச் சேர்ந்தவர் சிவகுமார்(33). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 5-ம் தேதி சென்னையில் இருந்து பேருந்தில் திருச்சி வந்தார். டிவிஎஸ் டோல்கேட்டில் இறங்கி அணுகு சாலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக காரில் வந்த 3 பேர் சிவகுமாரிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.1 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், சிவகுமாரிடம் வழிப்பறி செய்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த சங்குப்பாண்டி மகன் இசக்கிராஜா(27) என்பவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

விளையாட்டு

34 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்