பெங்களூருவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக குட்கா கடத்தப்படுவதாக மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் தாகூருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் கபிலன், எஸ்ஐ சிவசந்தர் மற்றும் போலீஸார், கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பம் பிரிவு சாலை அருகில் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை நோக்கி, சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், காரில் பான் மசாலா, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 505 கிலோ இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.4 லட்சத்து 21 ஆயிரத்து 608. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், குட்காவுடன் காரை பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா கடத்தியதாக நாட்றாம்பள்ளி அருகே உள்ள மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (39) என்பவரை கைது செய்தனர். அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன், மணி, குருவி (எ) சிங்காரவேலன், அரசு (எ) அரசகுமார் உட்பட 24 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
27 mins ago
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
36 mins ago
சினிமா
37 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
58 mins ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago