ராமநாதபுரம் | முன்விரோதத்தில் 2 பேர் கொலை: மைத்துனர்கள் உட்பட 5 பேருக்கு ஆயுள் சிறை

By செய்திப்பிரிவு

ராமநாதபுரம்: சாயல்குடி அருகே தேவாலயத்தை நிர்வகிப்பதில் ஏற்பட்ட முன்வி ரோதத்தால் மைத்துனரை வெட்டிக் கொலை செய்த முதி யவர், இவரது சகோதரி உட்பட 5 பேருக்கு ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண் டனை விதித்தது.

சாயல்குடி அருகே கன்னிரா ஜபுரத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் வேதமாணிக்கம்(75). இவரது தங்கையின் கணவர் வேதமணி (65). இவர்கள் இருதரப் பினரிடையே கிராம நிர்வாகிகளை தேர்வு செய்வது, தேவாலயத்தை நிர்வகிப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்தது.

தேவாலயம் தொடர்பாக நீதி மன்றத்தில் நடந்த வழக்கில் வேதமணி தரப்புக்கு சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துள்ளது.

தீர்ப்பு வந்ததை தொடர்ந்து 26.5.2015 அன்று வேதமா ணிக்கம் தரப்பினர் தேவாலயத்தை ஆக்கிரமிக்கச் சென்றுள்ளனர். அதைத் தடுக்க வேதமணி, அவரது தம்பி ஆசிர்வாதம்(58), வேதமணியின் தங்கையும், தூத் துக்குடி தருவைக்குளத்தைச் சேர்ந்த அந்தோணி செல்வராஜின் மனைவியுமான கன்னிமரியாள்(42) ஆகியோர் முயன்றனர்.

இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வேதமாணிக்கம் தரப்பினர் அரிவாள், கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி வேதமணி, ஆசீர்வாதத்தை கொலை செய் தனர். இதில் கன்னிமரியாளும் படுகாயமடைந்தார்.

இதுதொடர்பாக வேதமாணிக் கம், இவரது மகன் ஜோசப் ராஜா(51), வேதமாணிக்கத்தின் சகோதரர்கள் பால்மனோகரன்(69), குணசேகரன்(58), பொன்னையா மகன் ராஜமுத்து(43), வேத மாணிக்கத்தின் சகோதரியும், கொலை செய்யப்பட்ட வேத மணியின் மனைவியுமான பூவம்மாள்(67) ஆகியோர் மீது சாயல்குடி போலீஸார் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணையின்போது 2 ஆண்டு களுக்கு முன்பு குணசேகரன் இறந்துவிட்டார். இறுதி விசாரணை நேற்று நடந்தது.

மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா அளித்த தீர்ப்பில், தங்கையின் கணவரை வெட்டிக் கொலை செய்த வேதமாணிக்கம், பால்மனோகரன், ஜோசப்ராஜா, ராஜமுத்து, பூவம்மாள் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் வேதமாணிக்கம், பால்மனோகரன், ஜோசப்ராஜா, ராஜமுத்து ஆகி யோருக்கு தலா ரூ.10,000 அபரா தமும், பூவம்மாளுக்கு ரூ.15,000-மும் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் கட்டத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கீதா ஆஜரானார். விசாரணை அதிகாரியாக அப் போதைய கீழக்கரை டிஎஸ்பியாக இருந்த மகேஸ்வரி செயல்பட்டார். தற்போது அவர் சென்னை சிபிசி ஐடி ஏடிஎஸ்பியாக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்