கடலூர்: சிதம்பரம் அருகே வடக்குமாங்குடியில் மனைவியை கொன்று, அவரது உடல் அருகே படுத்து தூங்கிய கணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே உள்ள வடக்குமாங்குடி கிராமத்தைச் சேர்ந்த வர் ஆனந்த் (42). கொத்தனார். இவரது மனைவி தீபா (32). இவர்களுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகின்றன. 8 வயதில் சஞ்சீவி என்ற மகனும், 5 வயதில் சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த ஆனந்துக்கும் அவரது மனைவி தீபாவுக்கும் தகராறு ஏற் பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த் உருட்டுகட்டையால் தீபாவை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடிபோதையில் இருந்த ஆனந்த் தனதுமனைவி உடல் அருகே படுத்துதூங்கி உள்ளார். அக்கம் பக்கம்உள்ளவர்கள் நேற்று காலை,ஆனந்த் வீடு திறக்காமல் இருப் பதை பார்த்து சந்தேகமடைந்தனர். பின்னர் ஜன்னல் வழியாக உள்ளேபார்த்தபோது, ரத்த காயங்களு டன் தீபா உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. அருகில் ஆனந்த் தூங்கி கொண்டிருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸாருக்கு தகவல் தெரிவித் தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார்ஆனந்தை கைது விசா ரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
சினிமா
41 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
48 mins ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago