பெண் எஸ்பி பாலியல் தொல்லை வழக்கு 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பு: விழுப்புரம் நடுவர் மன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி, எஸ்பி நேரில் ஆஜர்

By செய்திப்பிரிவு

பெண் எஸ்பி ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முன்னாள் சிறப்பு டிஜிபி மீதுஅளித்த புகார் தொடர்பான வழக் கில் நேற்று விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் சிறப்பு டிஜிபி, அவருக்கு உடந்தையாக இருந்தாக கூறப்படும் எஸ்.பி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி நேரில் ஆஜரனார்கள். வழக்கு24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட் டிருக்கிறது.

தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வந்தவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்தாண்டு மார்ச் மாதம் பெண் எஸ்.பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய, அப்போது பதவியில் இருந்த செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, பாலி யல் புகார் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் சிபிசிஐடி போலீஸார், முன்னாள் டிஜிபி மற்றும் அவ ருக்கு உதவிய முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது ஆயிரம் பக்கங்களைக் கொண்ட குற்றப்பத் திரிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஜீலை மாதம் 29-ம் தேதி தாக்கல் செய்தனர்.தொடர்ந்து ஆகஸ்ட் 9-ம் தேதி விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் சிறப்பு டிஜிபி, முன்னாள் எஸ்.பி ஆகிய இருவருக்கும் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு, இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டு, தொடர்ந்து வழக்கு விசாரணை கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

குறுக்கு விசாரணை

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி,முன்னாள் சிறப்பு டிஜிபி முன்னாள்எஸ்.பி ஆகியோர் நேரில் ஆஜராயினர். பெண் எஸ்.பியிடம் முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை தொடங்கினர். அப்போது நீதிமன்ற அறைக் கதவுகள் மூடப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது.

குறுக்கு விசாரணையை நடுவர் கோபிநாதன் பதிவு செய்துக் கொண்டார். தொடர்ந்து குறுக்கு விசாரணை நிறைவடையாததால், பெண் எஸ்.பியிடம் தொடர்ந்து குறுக்கு விசாரணை நடத்த வரும் 24-ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நடுவர் உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஓடிடி களம்

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்